இயற்கையோடு இசைந்து வாழ்க!
சுதந்திரம் சொல்லும் விலங்கினங்கள்
வதம்பட வில்லை சுனாமியினால்.
பறவைகள் எல்லாம் அறிந்துமுன்னால்
உறவுகளோடு பறந்தன தன்னால்.
இயற்கையோடு இசைந்து வாழும்
இயல்புயென்றும் இனித்து நாளும்
ஆதிமாறா ஐந்தறி வாளும்
மேதகாறா மெய்நெறி கூறும்.
கிடைப்பது உண்டும் கிரமங்காக்கும்
அடைவது கண்டும் அரவம்நீக்கும்.
உடைப்பது ஒன்றும் உணர்விலில்லை.
படைப்பது கொன்றும் பயமறிவில்லை.
வயிற்றுக்குத் தேடும் வாழ்க்கைதான்
இயற்றுக்குக் கூடும் ஏற்கைதான்.
உடமை யென்றும் ஏதுமில்லை
கடமை மிஞ்சும் தீதுமில்லை.
இயல்பில் இணைந்தால் எதிர்வினையில்லை.
இயற்கை இழந்தால் இயக்கமில்லை.
வியந்தது விழைந்தால் சாதகமில்லை.
பயின்றது புரிந்தால் பாதகமில்லை.
கொ.பெ.பி.அய்யா.
சுதந்திரம் சொல்லும் விலங்கினங்கள்
வதம்பட வில்லை சுனாமியினால்.
பறவைகள் எல்லாம் அறிந்துமுன்னால்
உறவுகளோடு பறந்தன தன்னால்.
இயற்கையோடு இசைந்து வாழும்
இயல்புயென்றும் இனித்து நாளும்
ஆதிமாறா ஐந்தறி வாளும்
மேதகாறா மெய்நெறி கூறும்.
கிடைப்பது உண்டும் கிரமங்காக்கும்
அடைவது கண்டும் அரவம்நீக்கும்.
உடைப்பது ஒன்றும் உணர்விலில்லை.
படைப்பது கொன்றும் பயமறிவில்லை.
வயிற்றுக்குத் தேடும் வாழ்க்கைதான்
இயற்றுக்குக் கூடும் ஏற்கைதான்.
உடமை யென்றும் ஏதுமில்லை
கடமை மிஞ்சும் தீதுமில்லை.
இயல்பில் இணைந்தால் எதிர்வினையில்லை.
இயற்கை இழந்தால் இயக்கமில்லை.
வியந்தது விழைந்தால் சாதகமில்லை.
பயின்றது புரிந்தால் பாதகமில்லை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment