Saturday, 20 December 2014

பயம் தமிழுக்கில்லை.

தனியொரு அகராதி.

வெற்றி வெற்றி  என்றே தமிழே வா.
பற்றி பற்றி நின்றே பழமையே வா.
பயம் பயம் என்று மிரள்வோற்கெல்லாம்—பயம்
விலக்கும் பலமே வா வா!

பயம் என்ற சொல்லும் பயப்படும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை-பயம்
பழக்கம் தமிழில் வழக்கமில்லை.

அருமை என்றோர் மொழி யுண்டு.
திருமை கண்டோர்  வழியுண்டு.
பெருமை கொண்டது தமிழென்று--பயம்
அறியத் தமிழுக்கு தெரியாது..

பிறந்தோம் என்பதும் உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் ஆதாரம் ஒன்றால்
முடித்தோம் என்பதும் முயலும் நன்றால்--பயம்
 விடுத்த தமிழும் தோற்காது.

குடும்பச் சிறுமை தன்னலம் துறக்கும்
தடையாய் நிற்கும் அச்சமும் மறக்கும்.
கடமை உணர்ந்த அன்னைத் தமிழுக்கும்--பயம்
உடமை அல்லவே புகழுக்கும்.

தமிழே தானொரு அகராதி நூலே!
தரணி என்பதன் பொருளும் போலே!
புவியதில் வாழ்வின் புதுமைச் சோலை--பயம்
தவிர்த்த பெருமை வாழ்வே!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment