Wednesday, 24 December 2014

வள்ளலே தமிழே!

கொடைமொழி வாழ்க!

தேமதுரத் தமிழே திருக்குறள் திருவே!
நாமண மொழியே நெறிமுறைப் பொருளே!
சேமத்தின் செழிப்பே நாமத்தின் சிறப்பே!
கோபுரப் புகழே கொடைமொழி வாழ்க!

அன்னை தெரேசா அன்பின் வடிவம்.
உன்னை வரைந்தால் அன்னையின்  படிவம்.
அனாதை என்றே எவரிங்கு இருப்பார்
அரசாணை கொண்டே அவர்வந்து பொறுப்பார்.

பசியென்ற சொல்லை பழக்கத்தில் தொலைப்போம்.
விதியென்ற தொல்லை வறுமையும் அழிப்போம்.
தொடர்ந்தும் செம்மை ஆட்சியும் அமைப்போம்.
படர்ந்தும் திட்டம் போட்டதும் நிறைப்போம்.

மாறி மாறி ஆண்டும் மாறிடும்
மாறும் ஆட்சி  ஆட்டம் ஆறிடும்.
தமக்கென மேயும் தீயகம் முடியட்டும்
தமிழகம் என்றொரு தாயகம் விடியட்டும்.

கட்டும் தமிழகம் கட்டி நிறைப்போம்.
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுவோம்.
செம்மார் கரங்களில் நம்பிக் கொடுப்போம்.
நம்மா நிலம்பார் செம்மா நிலமாம்   


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment