Saturday, 6 December 2014

புதியநல்வழி.....குழந்தைப்பாடல்.

புதிய நல்வழி 6 (குழந்தைப்பாடல்)

தமிழை எழுதிப்படி!.
தாய்மொழி தமிழ்.
திருக்குறள் உலக மறை.
தீட்டில்லை பிற மொழி.
துருவுக அயல் கலை
தூண்டுக பல துறை.
தெளிவது நேர் பொருள்.
தேர்வது தாய்மொழி.
தைபோல் வாழ்க!
தொழிலும் தமிழில் பழகு.
தோன்றல் முதலே போற்றி,
தௌவை தமிழே போற்றி.

தௌவை--தாய்

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment