Wednesday, 19 January 2022

மனிதனும் விலங்கினந்தான்

 மனிதனும் விலங்கினந்தான் 


நானும் விலங்கினந்தான் 

தோணும் அப்படித்தான்.

மனங்கொண்ட ஓரறிவால்_ஆனேன்

மனிதனெனப் பேரதனால்.


கூடுதல் ஓரறிவால் 

தேடுதல் ஞானமானால் 

நானும் மனிதனாவேன் _மனிதம் 

காணுந் தெய்வமாவேன்.


அறிவொன்று கூடுதலால் 

புரிதல் கொண்டு பாடுவதால் 

நெறி சொன்னார் கவிஞரெலாம்_வாழும்

இறையென்பார் புவிஞரெலாம்.


இறை தந்த மனத்தினால் 

நிறை பெற்ற மனிதரால் 

உலகமொரு குடும்பமாம்_நிலவும் 

கலகமற அமைதியாம்.


வாழும் வரை வாழலாம் 

காலம் மட்டும் ஆளலாம்.

சுவர்கம் இங்கே ஒன்றேதான்_புவி

அவதாரம் கண்டேதான்.


என்னதான் கொண்டு வந்தோம் 

என்னதான் கொண்டு செல்வோம்.

விருந்தாளி போல வந்தோம்_இங்கு

இருந்த வரை நன்றியாவோம்.


கொ.பெ.பி.அய்யா.


















No comments:

Post a Comment