மனிதனும் விலங்கினந்தான்
நானும் விலங்கினந்தான்
தோணும் அப்படித்தான்.
மனங்கொண்ட ஓரறிவால்_ஆனேன்
மனிதனெனப் பேரதனால்.
கூடுதல் ஓரறிவால்
தேடுதல் ஞானமானால்
நானும் மனிதனாவேன் _மனிதம்
காணுந் தெய்வமாவேன்.
அறிவொன்று கூடுதலால்
புரிதல் கொண்டு பாடுவதால்
நெறி சொன்னார் கவிஞரெலாம்_வாழும்
இறையென்பார் புவிஞரெலாம்.
இறை தந்த மனத்தினால்
நிறை பெற்ற மனிதரால்
உலகமொரு குடும்பமாம்_நிலவும்
கலகமற அமைதியாம்.
வாழும் வரை வாழலாம்
காலம் மட்டும் ஆளலாம்.
சுவர்கம் இங்கே ஒன்றேதான்_புவி
அவதாரம் கண்டேதான்.
என்னதான் கொண்டு வந்தோம்
என்னதான் கொண்டு செல்வோம்.
விருந்தாளி போல வந்தோம்_இங்கு
இருந்த வரை நன்றியாவோம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment