நன்றி கெட்ட உலகமடா
பன்றிக் கூட்டம் பழக்கமடா..
பறித்த மரம் சாய்ந்ததிலும்
பழுத்த பழம் தேடுமடா.
கொடுக்கும் வரை கொண்டாடும்.
படுத்து விட்டால் பறந்தோடும்.
கருணன் எனப் புகழ்ந்ததெல்லாம்
கருணாக்கின் வஞ்சமடா.
வாங்கும் வரை கெஞ்சுமடா
வாங்கிய பின் மிஞ்சுமடா.
கை நீட்டி வாங்கியதை
பொய் பேசி மறுக்குமடா.
நாளெல்லாம் உதவினாலும்
நன்றி அதை எண்ணாது.
இல்லாமல் ஒரு நாளே
இல்லை யென்றால் ஏசுமடா.
காசுக்காக வேசம் போடும்
ஆசை மோச உலகமடா
வாய் பேசும் பேசையெல்லாம்
வாக்கு என்றும் நம்பாதடா.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment