அடப் போங்கடா மனுசங்களா
அடங்க மாட்டீங்களா_ஒருநாள்
அடங்கிப் போகும் அந்த நாள
நினைக்க மாட்டீங்களா?
அழுது அழுது வந்த நாளும்
அயத்துப் போச்சுதா _ கடைசியா
அழுக அழுக விட்டுப் போகயில
துணைக்கு யாரடா?
ஆட்டம் போட்ட காலிரண்டும்
கட்டிக் கிடக்குதா_ஆசை
அலைய விட்டக் கண்ணிரண்டும்
அடைஞ்சு விட்டதா?
தேடிவச்ச சொத்தை எல்லாம்
பூட்டிப் போட்டயா--கூடக்
கொண்டு போக காருவண்டி
ஓட்டிப் போவியா?
கோவத்துல செஞ்ச பாவம்
சாபம் எத்தன--அவங்
எழுதி வச்ச விதி முடிசஞ்சி
விளங்கிச் சொன்னியா?
வீடுவரை சொந்தம் பந்தம்
கூடி அழுகுது--ஆனா
காடு மட்டும் தீச்சட்டிதாங்
கூட வருகுது.
மறதி மட்டும் இல்லேனா
நிலமை என்னடா--நீரில்
தலமுழுகி குளிச்ச பின்னே
நினைக்க என்னடா?
கொ.பெ.பி.அய்.யா.
No comments:
Post a Comment