Saturday, 22 January 2022

அடங்குகங்குடா!அடங்கு!

 அடப் போங்கடா மனுசங்களா 

அடங்க மாட்டீங்களா_ஒருநாள் 

அடங்கிப் போகும் அந்த நாள 

நினைக்க மாட்டீங்களா?


அழுது அழுது வந்த நாளும் 

அயத்துப் போச்சுதா _ கடைசியா 

அழுக அழுக விட்டுப் போகயில

துணைக்கு யாரடா? 


ஆட்டம் போட்ட காலிரண்டும் 

கட்டிக் கிடக்குதா_ஆசை 

அலைய விட்டக் கண்ணிரண்டும் 

அடைஞ்சு விட்டதா? 


தேடிவச்ச சொத்தை எல்லாம் 

பூட்டிப் போட்டயா--கூடக்

கொண்டு போக காருவண்டி 

ஓட்டிப் போவியா? 


கோவத்துல செஞ்ச பாவம்

சாபம் எத்தன--அவங்

எழுதி வச்ச விதி முடிசஞ்சி

விளங்கிச் சொன்னியா?


வீடுவரை சொந்தம் பந்தம் 

கூடி அழுகுது--ஆனா

காடு மட்டும் தீச்சட்டிதாங்

கூட வருகுது.


மறதி மட்டும் இல்லேனா 

நிலமை என்னடா--நீரில்

தலமுழுகி குளிச்ச பின்னே 

நினைக்க என்னடா?


கொ.பெ.பி.அய்.யா.









 











No comments:

Post a Comment