Tuesday, 20 June 2023

கொரனாவில் வேண்டாம்.

கருவின் உருவில் மரண சாசனம்.
இறப்பின் நொடியோ இறைவன் இரகசியம்.
இயற்கை எய்திட  கணமும் வாழ்வு.
செயற்கை கொய்திட தாழ்வேன் சாவு?

நிரந்தரம் வாழும் வரமும் இல்லை
மரணம் போலும் பிரிவும் இல்லை.
வறுமையில் சாவதும் சாபம் இல்லை.
கொரனாவில் போலொரு பாவம் இல்லை.

முதுமை முடிவோ எய்தும் அமரம்.
இளமை பிரிவோ கொடுமை துயரம்.
வாழ்ந்ததன் எச்சம் ஆவது சரித்திரம்.
வீழ்ந்ததன் மச்சம் போவதும் விசித்திரம்.

நீர்க்கோல வாழ்வின் நிலையில்லா இளமை.
போர்க்கோல வாழ்வின் சாக்காலம் முதுமை.
கோரமாய் அழிவு கொரனாவில் வேண்டாம்.
பூரண முடிவும் புரியாமல் வாழ்வோம்.

வீட்டிலும் விலகியே தனித்திரு.
நாட்டிலும் அப்படியே பழகியிரு.
தொடரறுந்தால் கொரனா தொடராது.
இடரிதும் கடந்திடும் படராது.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment