ஈடேறும் காலம் உண்டோ!
நான் ஈடேறும் காலம் உண்டோ பராசக்தியே!
என் பாடாறும் நாளும் என்றோ மீனாட்சியே!
கண்ணீராய் சிந்துகிறேன் காணிக்கை தாயே-அது
வெண்ணீராய் சுட்டதோ விழித்திடு நீயே!
உழுபவன்தான் நிலம் காய்ந்து நொந்து அழுகிறான்.
உழைப்பவன்தான் சுமைதாங்கி இத்து விழுகிறான்.
களைத்தவனின் மூச்சிலேதான் கொடிகள் பறக்கிறது-உழைத்து
அலுத்தவனின் வீட்டிலேதான் அடுப்பு உறங்குகிறது.
தொழிலாளர் வர்கம்தான் தூணாய் தாங்குகிறது.
தூக்கமின்றி வாழ்வுக்காக தானாய் ஏங்குகிறது.
கொழுத்தவனின் நாய்கூட மெத்தை கேட்கிறது-உழைப்பால்
இளைத்ததவனின் நோய்தாதானே சொத்து ஆகிறது.
பணக்கார இனம்தானே அரசியல்வாதிகள்
உனக்காக இழந்ததென்ன உரசிப் பாருங்கள்.
கட்சிகளை மறந்துவிட்டு கரையேறுங்கள்-சுதந்திரப்
பட்சிகளாய் சுயமாக விடை தேடுங்கள்.
காவிரியைப் பூட்டி வைத்து காவல் காத்தவர்
சாவியையும் தொலைத்துவிட்டு ஊரை ஏய்ப்பவர்
பாவவினை தீருமென்ற பரிகாரமோ-விட்ட
சாபக்கணை மாற்றத்தான் பரிவாரமோ!
கவிஞர். கொ,பெ,பி .அய்யா.
நான் ஈடேறும் காலம் உண்டோ பராசக்தியே!
என் பாடாறும் நாளும் என்றோ மீனாட்சியே!
கண்ணீராய் சிந்துகிறேன் காணிக்கை தாயே-அது
வெண்ணீராய் சுட்டதோ விழித்திடு நீயே!
உழுபவன்தான் நிலம் காய்ந்து நொந்து அழுகிறான்.
உழைப்பவன்தான் சுமைதாங்கி இத்து விழுகிறான்.
களைத்தவனின் மூச்சிலேதான் கொடிகள் பறக்கிறது-உழைத்து
அலுத்தவனின் வீட்டிலேதான் அடுப்பு உறங்குகிறது.
தொழிலாளர் வர்கம்தான் தூணாய் தாங்குகிறது.
தூக்கமின்றி வாழ்வுக்காக தானாய் ஏங்குகிறது.
கொழுத்தவனின் நாய்கூட மெத்தை கேட்கிறது-உழைப்பால்
இளைத்ததவனின் நோய்தாதானே சொத்து ஆகிறது.
பணக்கார இனம்தானே அரசியல்வாதிகள்
உனக்காக இழந்ததென்ன உரசிப் பாருங்கள்.
கட்சிகளை மறந்துவிட்டு கரையேறுங்கள்-சுதந்திரப்
பட்சிகளாய் சுயமாக விடை தேடுங்கள்.
காவிரியைப் பூட்டி வைத்து காவல் காத்தவர்
சாவியையும் தொலைத்துவிட்டு ஊரை ஏய்ப்பவர்
பாவவினை தீருமென்ற பரிகாரமோ-விட்ட
சாபக்கணை மாற்றத்தான் பரிவாரமோ!
கவிஞர். கொ,பெ,பி .அய்யா.
No comments:
Post a Comment