Wednesday, 21 February 2018

பத்திரமாய் பழகு.

பத்திரமாய் பழகு.

எங்கேயோ இருப்பான் ஒரு நல்லவன்.
அங்கேயும் அவனைக் கெடுப்பான் வல்லவன்.
வாசங்காட்டி நாசமாக்கப் பழகுவான்.
மோசம் வந்தால் வாசல் தேடி விலகுவான்.

எவருக்குமே இருக்கும் ஒரு பலஹீனம்
அவருக்குமே தெரியாதது இரகசியம்.
ஆனாலும் கண்டறிவான் சண்டாளன்.
தோணாமல் தூண்டிவிட்டு தீர்ப்பானவன்.

பத்திரமாய் பழகவேண்டும் பாவபூமியில்
சத்தியமாய் உலகமின்று சாபநாளிதில்.
நல்லவராய் வாழ்வதிங்கு நல்லதில்லையோ!
உள்ளவராய் ஏய்த்தாலே திலகம் சூட்டுமோ!

கொ.பெ.பி. அய்யா

No comments:

Post a Comment