Saturday, 27 August 2016

காதல் வேதனை.

காதல் வேதனை.

எப்போ வருவே நீ எப்போ வருவே!
இதய வாசல் திறந்து வச்சேன்-நீ
எப்போ வருவே!

சொப்பனத்திலே- நீ
சொல்லாமத்தானே
அப்போ வருவே -நீ
அப்போ வருவே.

கனவு காணத்தான் -நான்
கண்ணை மூடுறேன்.
நினைவில் வந்து நீ-என்
நெஞ்சில் ஆடுறே.

நினைச்சுப் பாக்குறேன் -நீ
நிழலில் தெரியுற.
அணைக்கத் தழுவுறேன் -நீ
அலையாய் கலையுற.

மனசத் தேடுறேன் -அது
மயங்கிக் கிடக்குது.
எழுப்பி விடுகிறேன் -நீ.
எடுத்துப் போகிற.

ஆணாப் பெண்ணாத்தான்-நான்
ஆகிப் பாக்குறேன்.
ஆனா என்னதான் -நீ
அடங்க மாட்டங்குற

யாருன்னு சொல்லு-உனக்கு
பேரென்ன சொல்லு.
காதல் என்பதும்-என்
காதில் விழுகுது.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment