Wednesday, 24 August 2016

காதலின்றி உலகமா?

காதலால் வாழும் பூமி.

காதலின்றி உலகம் தனித்து வாழாது.
கடவுளவனும் காதலை மறந்தால் உலகேது?

அலைகள் தேடும் கரைதொடும் காதல் ஓயாது.
கரைதொடும் போது அலையிடும் முத்தம் காயாது.

கடலலைத் தாண்டும் அலைகள் நிலத்தில் வாழ்வதில்லை.
அலைகள் மறந்தும் கடலும் அமைதி கொள்வதில்லை..

காதல் மறுத்த கோள்கள் எல்லாம்
கல்லாய் மண்ணாய் திரிகிறது.
காதல் வாழும் பூமி மட்டும்
காணும் சொர்க்கம் ஆகிறது.

விண்ணை எட்ட  தன்னை உயர்த்தும்
மலையின் காதல் தடையேது?
மலையைக் கொஞ்ச மேகமிரங்கும்
விண்ணின் காதல் இணையேது?

எட்டும் வரைக்கும் எட்டிப் பிடிக்கும்
கெட்டிக் காதல் தோற்காது.
சுட்டுக் கரைக்க எட்டாக் காதல்
நட்டிக் கொடியை வெல்கிறது..

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment