Sunday, 4 September 2016

வினை தீர் விநாயகா!

வினை தீர்க்கும் விநாயகனே

வினை தீர்க்கும் விநாயகனே
விடை சொல்லு கணபதியே-தீய
வினைநீங்கி மீள்வதற்கு விடிவென்ன வேழமுகா!

நெஞ்சாரப் பொய் பேசும்
வஞ்சகரின் வாய் வீசும்-தீய
பஞ்சமாப் பாவங்களும் மிஞ்சலாமோ பஞ்சமுகா!

இல்லை நீ என்போரை
தொல்லை செய் துன்பாரை-தீய
பல்பிடுங்கி விடமகற்றி சொல்வழங்கு நந்தனா!

ஓங்கார கண பதியே
தீங்காற திரு நிதியே-தீய
ஆங்கார அவலங்களை நீங்காற்று ஐங்கரா!

செம்மை யாய் ஓராட்சி
நன்மை யின் நேராட்சி-தீய
வெம்மையேதும் ஊறாமல் ஒன்றுசெய் மந்திரா!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment