சொந்தமே வா வா!
மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!
(மணமகனே)
தனமிருக்கும் பணமிருக்கும் அந்த நாட்டில்—நல்ல
சனமிருக்கும் மனமிருக்கும் இந்த நாட்டில்.
நாஉரையும் நாடகம்தான் சென்ற நாட்டில்—மெய்
நாநயமும் நேர்முகமும் சொந்த நாட்டில்
(மணமகனே)
கற்ற பாடம் உற்ற நடை நாடு நமது வீடு--நெஞ்சில்
மற்றவரை கணம்மதித்து வாழும் அழுகு கூடு.
நல்லவர்கள் நண்பராக தேடும் பண்பாடு.---உறவில்
பச்சமுடன் பாச மணம் வீசும் நேசமேடு.
(மணமகனே)
ஆபரணம் காவரணும் சிறப்பிருக்காது.—திருமணம்
ஆகவரும் மாப்பிளைக்கும் குறைவிருக்காது
எந்நாளும் நன்னாளே மனம்சலிக்காது.—இருமனம்
கண்ணாலும் உண்பதற்கும் புளிப்பிருக்காது
(மணமகனே)
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment