Saturday, 18 October 2014

தாயே தமிழே!






தாயே தமிழே வாழ்க!

வருக வாழ்க  வாழும் தமிழே தாயே!
பெருக நீள்க பேரும் புகழும் நீயே!
தருக தருக நாளும் ஆட்சி தாயே!
பெறுக பெறுக மேரும் மாட்சி நீயே!

அம்மா என்னும் சொல் உதிர்த்தால்

அன்பு என்னும்  நெல் சிதறும்.
அம்மா எனவும் உனை நினைத்தால்
அநியாயமும் தான் பதறும்?

தாயே என்னும் தமிழ் பகிர்ந்தால்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே எனவும் உனை நினைந்தால்
தைரியமும் தான் பெருகும்.

அன்னை எனவும் வாய் மலர்ந்தால்
மென்மை தானே உள் வளரும்.
அன்னை எனவும் உனை அழைத்தால்
மண்ணுமதிர்ந்து வினை தளரும்.

மாதா எனவும் மடி கிடந்தால்
மனமே மகிழ்ந்து குணம் குளிரும்.
மாதா எனவும் உனைத் தொழுதால்
சோதனை யாவும் விலகிடுமே.

பெற்றவள் அவளின் முகம் பார்த்தால்
பிள்ளையின் உற்ற பிணி தீரும்.
நற்றமிழ் சொன்ன உனைக் கற்றால்
நல்லதெல்லாம் எமைச் சேரும்.

கொ.பெ.பி.அய்யா.


மென்மை தானே உள் வளரும்.

அன்னை என உனை அழைத்தால்

மண்ணதிர்ந்து வினை தளரும்.



மாதா என மடி கிடந்தால்

மனம் மகிழ்ந்து குணம் குளிரும்.

மாதா என உனைத் தொழுதால்

சோதனைகள் விலகி ஓடும்.



பெற்ற அவள் முகம் பார்த்தால்

பிள்ளை உற்ற பிணி தீரும்.

நற்றமிழே உனைக் கற்றால்

நல்லதெல்லாம் எனைச் சேரும்.



கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment