Saturday, 25 October 2014

ஆங்கில மோகம்.





ஆங்கில மோகம்!

இந்த முகத்தைப் பாருங்கள்.!
நந்த வனத்தைக் காணுங்கள்!.
சொந்த அகத்தைக் கேளுங்கள்!.
எந்த விதத்தைத் தேடுங்கள்.!

கள்ளம் அறியா உள்ளம் உள்ளே.
துள்ளும் சிரிப்பே சொல்லும் சொல்லே..
வெள்ளை மனமே பிள்ளைக் குணமே.
நல்ல தமிழே முல்லை வனமே!

மாசிலா மணியே மங்கள அணியே.
ஆசிலா மொழியே அன்பினில் கனியே.
பேசுந் தென்றலே பிழையதில் புயலே.
கூசும் ஒன்றிலே கறைபடும் செயலே!

அணங்கு மகளோ வணங்கா முடியோ!
துலங்கும் பகலோ விளங்கும் தெளிவோ!
இணங்கா மலையோ துணிவின் நிலையோ!
கலங்காக் கலையோ தமிழே தலையோ!!

சோதனை பழகி வேதனை முறிக்கும்
சாதனை படைத்து பாதையை குறிக்கும்
வாதினை எதிர்த்து வழக்கினை முடிக்கும்
சாதென உதிர்த்தார் மனம்வெம்பி மடிக்கும்.

கள்ளம் சொன்னார் உள்ளம் பதறும்.
பள்ளம் செய்தார் கள்ளம் கதறும்.
வெள்ளம் எனுமக்கள் விசைபட்டு சிதறும்.
சொல்லம்பும்பு எதிர்பட்டு முடிவாகி உதறும்.

நிழல்தரும் ஆலமரம் விழுதுகளால் தான்பெருக்கும்.
நிலைபெறும் ஆளும்தமிழ் கலைகளால் தான்சிறக்கும்.
விழல்பாய்ச்சும் நீர்வீணே விலையாங்கில மோகமேனோ?
தழல்காய்ச்சும் தேர்வேனோ தலைத்தீங்கு தாகமேனோ?

கொ.பெ.பி.அய்யா,


No comments:

Post a Comment