கீதை என்ன சொல்லும்?
கொதித்துத் துடிக்குது உண்மைகள்.
குளிர்ந்து கிடைப்பது எப்போது?
மிதித்துக் கிடக்குது நன்மைகள்.
மதித்து நடப்பது எப்போது?
கண்ணைக் கட்டிக் கொண்டாள்
காந்தாரி போல் நீதிமகள்.
என்னதான் நடக்கு திங்கே?
பண்ணுதெல்லாம் பலந்தா னிங்கே!
.
எண்ணும் மெய்மை தீர்ப்பு எங்கே?
சொல்லும் பொய்மை சாட்சி யங்கே! .
உண்மை மொழியக் கற்ப தெங்கே?.
வல்லநீதியும் வெல்வ தங்கே!
மக்கள்சக்தி என்ன சொல்லும்
மனம் எழுதும் தீர்ப்பு வெல்லும்.
எக்காலம் சாமி பேசும்?
அக்காலம் நீதி பேசும்.
கொதித்துத் துடிக்குது உண்மைகள்.
குளிர்ந்து கிடைப்பது எப்போது?
மிதித்துக் கிடக்குது நன்மைகள்.
மதித்து நடப்பது எப்போது?
கண்ணைக் கட்டிக் கொண்டாள்
காந்தாரி போல் நீதிமகள்.
என்னதான் நடக்கு திங்கே?
பண்ணுதெல்லாம் பலந்தா னிங்கே!
.
எண்ணும் மெய்மை தீர்ப்பு எங்கே?
சொல்லும் பொய்மை சாட்சி யங்கே! .
உண்மை மொழியக் கற்ப தெங்கே?.
வல்லநீதியும் வெல்வ தங்கே!
மக்கள்சக்தி என்ன சொல்லும்
மனம் எழுதும் தீர்ப்பு வெல்லும்.
எக்காலம் சாமி பேசும்?
அக்காலம் நீதி பேசும்.
சட்டம் என்ன சொல்லும்?
சாட்சியின் வழி செல்லும்.
கீதை என்ன செய்யும்?
பாதையின் மொழி சொல்லும்.
“யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "
எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அதை அழிக்க நான் பிறந்து வருவேன் என்ற கிருஸ்ண பரமாத்மாவின் கீதை வரிகளுக்கிணங்க அவரே அதர்மத்தை அழிக்க என்று மீண்டும் வருவார்?
கொ.பெ.பி.அய்யா.
“யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "
எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அதை அழிக்க நான் பிறந்து வருவேன் என்ற கிருஸ்ண பரமாத்மாவின் கீதை வரிகளுக்கிணங்க அவரே அதர்மத்தை அழிக்க என்று மீண்டும் வருவார்?
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment