இதுதான் வாழ்க்கை.
கிடக்கும் போதுதான் போடும் மல்லாக்கா
கடக்கும் போதுதான் பூவும் பல்லாக்கா?
இருக்கும் போதுதான் வாழும் நரகமா?
பறக்கும் போதுதான் தேடும் சொர்க்கமா?
மல்லாக்கப் படுத்துனது பல்லாக்குப் போகுது.
சொல்வாக்கு அடுத்துனது பின்னாலே பேசுது.
நல்லவனா பொல்லவனா எல்லாமே புரியுது
செத்தவனா வாழ்ந்த பிணம் என்றுதான் விளங்குது.
பீச்சிந்திப் படுக்கையில் துரு நாற்றமா?
பூச்சிந்தி நடக்கையில் அது மாற்றுமா?
கொட்டுமேளம் வெடிகளும் செய்யும் சத்தமா?
பட்டபாவம் மறைக்கவும் இது பத்துமா?
சொத்துக்கள் பத்துக்கள் எதுவும் காக்குமா?
பற்றுக்கள் பாசங்கள் அதுவும் மீட்குமா?
எத்தனை வயிற்றெரிச்சல் எதுக்கது தேவையா?
என்னநீ கொண்டங்கு போவாயோ காடய்யா?
உனக்காக வீடழுதால் நீசெய்த உன்பாவம்
உறவாக ஊரழுதால் பேர்செய்த தன்யோகம்.
உனக்காக நீ வாழ்ந்தால் ஊரறியாது.
உலகுக்காக உயிர் வாழ்ந்தால் பேரழியாது.
தாயிடம்தான் ஜீவன்கள் பயணம் தொடக்கமே..
தீயிடம்தான் தூலங்கள் பயணம் அடக்கமே.
இடையில்சிறு பயணம்தான் வாழ்க்கை என்பதே.
முடிவினில்பிடி சாம்பல்தான் மனிதன் என்பானே!
.
சொந்தங்களும் சுற்றியழும் கூட வருமா?
சுட்டெரிக்கும் நேரம்வரை கூடி அழுமா?
பந்தங்கள் எத்தனை நாள் நினைத்திருக்குமோ!
சொந்தங்களும் சுற்றியழும் கூட வருமா?
சுட்டெரிக்கும் நேரம்வரை கூடி அழுமா?
பந்தங்கள் எத்தனை நாள் நினைத்திருக்குமோ!
அந்த நாள் பதினாறில் மறந்து போகுமே.
கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment