தரணி என்றும் வாழும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
பேருக்கு ஒன்று தலைமை
ஊருக்கு ஒன்று நிலைமை
ஆளுக்கு ஒன்று அதிகாரம்
யாருக்கு நின்று செயலாகும்?
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
.
சொந்தம் கூடி கொண்டாடும்
பந்தம் தேடி தந்தாளும்
மந்தை ஒன்று அரசாண்டால்
சந்தை போன்று நாடாகும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
வியாபாரிகள் நாடாண்டால்
வியாபாரமே பாடென்றால்
விலையாவது மக்களென்றால்
விதியாவது வினைமறந்தால்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
வழக்கு வந்தால் எதிர்கொண்டு
இழுக்ககன்று புதிர் வென்று
நிலைத் தாள்வார் யார்நின்று.
தலைத்தான் வாழ்வே என்று.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment