Tuesday, 21 June 2016

தன்னம்பிக்கை.

தன்கை தன்னபிக்கை.

மெத்தனம் கூடாது.
மிதப்பும் ஆகாது.
சுற்றிநீ உழைத்தால்தான்
சுதந்திரம் நிலைத்திருக்கும்.

எதிரியை ஏளனமாய்
எண்ணவும் வீணாவாய்.
பதறிநீ விழித்தால்தான்
பதவியும் நிலைத்திருக்கும்.

புகழ்ச்சியில் சிக்காதே!
புதையலை நம்பாதே!
முயன்றுநீ எழுந்தால்தான்
முகவரி நிலைத்திருக்கும்.

பகைவனை நம்பாதே!
புகையினில் வெம்பாதே!
வகைநீ செழித்தால்தான்
தகையது நிலைத்திருக்கும்.

மெய்மறைக்க முனையாதே!
பொய்யுரைக்க விழையாதே!
கையைநீ நபித்தான்
உய்யும்வழி நிலைத்திருக்கும்.

சத்தியம் மறக்காதே!
புத்தியும் இழக்காதே!
உத்தமன்நீ உறுதிதான்
நித்தியம் நிலைத்திருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment