Saturday, 28 May 2016

சமர்ப்பர்ப்பணம்

உமக்கே சமர்ப்பணம்.

பழைய நணபர்கள் பறந்தனர்.
புதிய தோழர்கள் கிடைத்தனர்.
கிடைத்தவர்கள் தொடர்வதற்கும்
கடவுளைத்தான் இறைஞ்சுகிறேன்.

எழுத்துச் சோலை நண்பர்களே!
ஏற்ற நிழலுந் தந்தீரே!
ஆயிளுந்தான் கூடியதே!
சேயாகிப் பாடினேனே!

பழுதேதுங் கண்டதிலே
திருத்தங்கள் செய்தீரே!
பாதை கூட்டி ஆதரித்து
பயனுறச் செய்தீரே!

பாராட்டுப் பத்திரம்
சீராட்டித் தந்தததும்
நேராக உம் அன்பில்
சீராக சமர்ப்பணம்.

ஆயிரம்  செய்வதற்கும்
ஆயுளும் வாழ்வதற்கும்
தாயுளம் அன்பரே!
நேயறம் பெய்வீரே!.

கொ.பெ.பி.அய்யா

No comments:

Post a Comment