சும்மா இரு ஆனால்
சோம்பலாய் அல்ல.
சொல்லே இல்லாத
நல்லவனாய் சும்மா இரு.
ஐம்புலன்கள் அடக்கி
சும்மா இருக்க!
சும்மா பயிற்சி
சும்மா வெல்க!.
சும்மா என்றால்
சுமை இல்லாமை.
சும்மா ஆகினால்
சுபம் ஆகவாம்.
சும்மா மறைந்து
சுயநிலை மறக்கும்.
ஐம்புலன் ஒடுங்கி
ஆகாயம் பறக்கும்.
சும்மா சும்மா
சொல்லாமை அடங்கு.
சும்மா சும்மா
இல்லாமை ஒடுங்கு.
சும்மா சும்மா
உள்ளமை சும்மா.
சும்மா சும்மா
எல்லாமே சும்மா.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment