Tuesday, 27 June 2017

என்ன சொல்ல போகிறான்?

என்ன சொல்ல போகிறான்?

என்ன சொல்ல போகிறான்-அவன்
என்ன சொல்ல போகிறான்!
நெஞ்சுக்குத் தான் தெரியும் -அவன்
செஞ்ச பொல்லா பாவம்-தனக்கு  
வந்த இந்த சாபம்.

பாழடைஞ்ச வீடு- அது
பங்களாணு பேரு.
தேளடைஞ்ச கூடு -அது
திசை இல்லா ஊரு.

அடைஞ்சாலும் பொழுது-இன்னும்
விடியலயே அழுது.
ஒத்தையானா சத்தம்-கும்மி
சுத்தி சுத்தி அடிக்கிறது.

அய்யோ சாமி போதும் -இது
ஆருக்குமே வேண்டாம்.
தீயா வாட்டும் தேகம்- எப்போ
பேயா கூட்டிப் போகும்.

பேய்கள் வாழும் பூமி-இங்கு
நாய்கள் ஓலம் சாமி.
மறுபிறவி வேண்டாம்-இந்த
ஒறுபிறவி போதும்.

கவிஞர்.கொ.பெ.பி அய்யா. 

No comments:

Post a Comment