Thursday, 9 April 2015

குளத்தூரில் கல்லூரி.


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர்
ந.மரியப்பநாடர்--முத்துக்கனி
கலைக்கல்லூரி திறப்புவிழா வாழ்த்து.
நாள்:04/05/2015.

வளநாடாம்  நலநாடாம்—கல்வி
களநாடாம் தமிழ்நாடாம்.
தளநாடாம் 
நலத்தூராம் நகரமையம்

அறம் வளர் இந்து நாடார்—கல்வி
தரம் உயர் தந்து வாரார்.
திறம் பல கலைகள் தேற—இன்று
திறக்கிறார் கல்லூரியும்.

அறம் நெஞ்சில் போற்றத்தானோ—நாடார்
குலம் மண்ணில் தோற்றினாளோ!
வரம் தந்து ஏற்றியவள்—அன்னை
அருள் பத்ர காளி போற்றி!

அகம் புறம் இரண்டு கண்கள்—கற்று
ஆயும் அறிமூன்றாம் கண்ணை
திறந்த மகான் காமராசர்---நாடார்
பிறந்த குலம் போற்றி!போற்றி!

மாரியாப்பர் முத்துக்கனி—முருகப்பா
நாடார் வகை பெற்றக்கனி
சென்னை வாழ் சேகரர்கள்----தந்தை
அன்னை புகழ் யோகம் செய்தார்.

மாரியாப்பர் முத்துக்கனி—நாடார்
கூறும் பேர் கல்லூரி
ஊறிபல் கலைக் கழகமாகி----நாளை
தேறி நிலை வாழி!வாழி!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment