Monday, 9 June 2014

வேடநத்தம்



விரும்பும் ஊர் வேடநத்தம்.

வேட நத்தம் என்றாலே--எவரும்
விரும்பும் ஊர் என்னும் பொருளே.
தேடும் நித்தம் கண்டாலே--காசி
விசுவநாதர் அருளாலே!

தூத்துக்குடி மாவட்டம்--வளம்
ஏற்றுக்குடி வேடநத்தம்.
வேற்றுமைகள் பாராட்டா--உளம் 
போற்றுக்குடி வேடநத்தம்.

ஊரென ஒன்றும் தூரம்--காட்டும்
உயர்ந்து நின்றும் தோப்பு.
நேரெனக் கொண்டும் நித்தியம்--போற்றும்
நிமிர்ந்த கோபுரம் வேட நத்தம்.

வீர வேடர் நீராவி--கண்டு
வேட்கை தணிய மொண்டு
ஆறிய தாகம் அருமை--கொண்டு
தேரிய நத்தம் வேட நத்தம்.

வேடுவர் பெண்ணை நாடியே--வேலன்
தேடிக் களைத்து ஓடியே-
கூடிய மோகம்  தீரவே---ஊற்று
ஆடிய தீர்த்தம் வேடநத்தம்

ஊரெனக் குடும்பம் ஒன்றாம்--பந்தம்
தேரெனப் பிடிக்கச் சொந்தம் 
சீரென நகர்த்தும் நன்றாம்--ஒன்றாம்
பேரெனப் புகழுறும் வேடநத்தம். 
.
விரிந்தும் பெருகியும் வளர்ந்தும்--தினம்
அறிந்தும் சமத்துவம் அமைந்தும்-
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்--கணம்!
உறையும் வணக்கம் வேட நத்தம்.

சுவர்க்கம் எங்கே தேடலாம்--அந்த 
சுகமும் கண்டே ஆறலாம்.
கரிய மாலின் கருணையே--கண்ட
புதிய சுவர்க்கம் வேடநத்தம்.

காசி விஸ்வ நாதனும்--துணை
வாசி விசாலா ஆளும்-
ஆசி மேவும் வாசம்--இணை
நேசம் வாழும் வேடநத்தம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment